தொகுப்பு: M.J.M Razan
Wi-Fi P2P என முதலில் அழைக்கப்பட்டது.
இது பல Wi-Fi சாதனங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்துகொண்டு தகவல்களை பரிமாரிக்
கொள்ள உதவுகின்றது. முக்கியமான விஷயம் என்னவென்றால் இதற்கு இணைய இணைப்பு
தேவை இல்லை. சாதனங்களில் Wi-Fi Direct/Wi-Fi வசதி இருந்தாலே போதுமானது.
மொபைல் போன்கள், பிரின்டர்கள்(printers), கேமரா, கம்ப்யூட்டர், விளையாட்டு
சாதனங்கள்(PS3) போன்றவை ஒன்றோடு ஒன்று தங்களுக்குள் இணைந்து
தகவல்கள்(datas), அப்ளிகேசன்கள்(applications), பைல்கள்(files) போன்றவற்றை
பகிர்ந்து கொள்ள முடியும்.
எதிர்காலத்தில் இந்த வசதி மூலம் வீட்டின் விளக்குகளை மொபைலின் மூலம்
அணைக்கவோ எரியவைக்கவோ இயலும்..இதுபோல பல விஷயங்கள் இந்த தொழில்நுட்பத்தில்
உள்ளன..வருங்காலம் இந்த தொழில்நுட்கத்தை உபயோகித்து பயன்பெறும் என்பதில்
ஐயமில்லை..
Wi-Fi Direct சாதனம் WPA2™ என்னும் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் இயங்குவதால் தகவல் பாதுகாப்பு குறித்து கவலைபட தேவை இல்லை.
No comments:
Post a Comment