தேவையான பொருட்கள் :முலாம்பழம் – 1
வெள்ளரிக்காய் – 2
புதினா இலை – 1 கைப்பிடி
தேன் – சிறிதளவு
செய்முறை :
• வெள்ளரிக்காய், முலாம்பழத்திலிருந்து விதைகளை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
• பாதி வெள்ளரிக்காய், சிறிதளவு புதினா இலைகளை மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
• நறுக்கிய பழம், தேன், புதினா இலைகளை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து நன்றாக வடிகட்டி கொள்ளவும்.
• வடிகட்டிய ஜூசில் நறுக்கிய வெள்ளரிக்காய், புதினா இலைகளை போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து குச்சி ஐஸ் அச்சுகளில் ஊற்றி பிரிட்ஜில் பீரிசரில் 3 மணிநேரம் வைத்து எடுக்கவும்.
• கோடை காலத்தில் இந்த வெள்ளரிக்காய் புதினா குச்சி ஐஸ் உடலுக்கு குளிர்ச்சியை தரும். குழந்தைகளுக்கு இவ்வாறு வித்தியாசமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
No comments:
Post a Comment